search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இட வசதி"

    • உழவர் சந்தைக்கு காய்கறிகொண்டுவருவதை நிறுத்தி சாலை ஓரங்களில் கடை அமைத்துவிற்பனை செய்ய போவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
    • சில்லரை விற்பனையாளர்கள் சாலையின் இரு புறமும் தற்காலிக கடை அமைத்து விற்பனை செய்து வருகின்றனர்.

    உடுமலை:

    உடுமலைப்பேட்டை ெரயில் நிலையம் அருகே அமைந்துள்ள உழவர்சந்தையில் காய்கறி விற்பனை செய்ய உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் சுற்றுவட்டராப் பகுதி விவசாயிகள் தினந்தோறும் விற்பனை செய்து வருகின்றனர். ஆனால் இதேபோல் உழவர்சந்தையின் வெளிப்புறம் சில்லரை விற்பனையாளர்கள் சாலையின் இரு புறமும் தற்காலிக கடை அமைத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் விவாசாயிகளுக்கு மிகவும் நெருக்கடி ஏற்படுகிறது.

    மேலும் வாகனங்களை நிறுத்தி செல்வதால் போக்குவரத்து நெரிசல், விபத்துக்கள் ஏற்படுகிறது .இதுகுறித்து விவசாயிகள் பல முறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை எனவும் பெரிதும் நஷ்டம் அடைவதாகவும் தெரிவித்தனர் .உடனடி நடவடிக்கை இல்லை என்றால் உழவர் சந்தைக்கு காய்கறிகொண்டுவருவதை நிறுத்தி சாலை ஓரங்களில் கடை அமைத்துவிற்பனை செய்ய போவதாக விவசாயிகள் தெரிவித்தனர்

    • நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து வருவதால் பாதுகாப்பு வசதிக்காக பல்வேறு அடிப்படை வசதிகள் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது.
    • அருவியின் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள நிலங்களை கண்ட றியும் முயற்சியில் பேருராட்சி நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. தற்போது சில இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்து உள்ளோம்.விரைவில் வாகனங்கள் நிறுத்துவதற்க்கு கூடுதல் இட வசதி ஏற்படுத்தப்படும்.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்று திற்பரப்பு அருவி.

    திற்பரப்பு பேரூராட்சிக்கு உட்பட்ட இந்த அருவிக்கு தினமும் சுற்றுலா பயணிகள் வந்து குடும்பத்துடன் குளி த்துச் செல்கின்றனர். நாளுக்கு நாள் கூட்டம் அதி கரித்து வருவதால் பாது காப்பு வசதிக்காக பல்வேறு அடிப்படை வசதிகள் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது.

    முக்கியமாக சுற்றுலா பயணிகளின் வாகனங்களை நிறுத்துவதற்கான இடத்தை விரிவு படுத்த வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டு உள்ளது. இது தொடர்பாக திற்பரப்பு பேருராட்சி தலைவர் பொன்ரவி, செயல் அலுவலர் பெத்ராஜ், மற்றும் அதிகாரிகள் திற்பரப்பு அருவி பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.

    இது குறித்து பேருராட்சி தலைவர் பொன் ரவி நிருபர்களிடம் கூறிய தாவது:-

    திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் நாளுக்கு நாள் அதி கரித்து வருகிறது. அவர்களது வாகனங்களை நிறுத்தும் இடத்தில் இட நெருக்கடி ஏற்பட்டு உள்ளது எனவே கூடுதல் இடம் ஏற்படுத்த வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டு உள்ளது.

    இதற்காக அருவியின் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள நிலங்களை கண்ட றியும் முயற்சியில் பேருராட்சி நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. தற்போது சில இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்து உள்ளோம்.விரைவில் வாகனங்கள் நிறுத்துவதற்க்கு கூடுதல் இட வசதி ஏற்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    ×